Thursday, December 3, 2020

ரன்னிங் டைரி - 150

03-12-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

கடுமையான வெய்யில். முதலில் கோவிலுக்கு ஓடினேன். நேற்று என் பிறந்த நாள். கோவிலுக்கு செல்ல முடியாமல் போனது. அதனால் இன்று கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முன்னரே முடிவு செய்திருந்தேன்.மாதாவின் முன் நின்றேன்.சற்று நேரம் கழித்து பங்குத்தந்தை என்னைப் பார்த்து கை காட்டினார். நான் சிரித்தேன். சட்டென்று சென்ற வாரம் படித்த ஒன்று எண்ணத்தில் தோன்றியது.  புனித அகஸ்தின் எழுதிய "Teaching Christianity" என்று சிறிய புத்தகத்தில் எப்படி பிரசங்கம் வைக்க வேண்டுமென்று அவர் கூறுவது மிகவும் முக்கியமானவை. ஒரு நல்ல பிரசங்கம் எனபது பின்வரும் மூன்றையும் கொண்டிருக்கும் என்கிறார் அவர். அதாவது 

1.Teaching 

2.Delighting 

3.Persuading 

சிரித்துக் கொண்டே மீண்டும் ஓட ஆரம்பித்தேன். புனித அகஸ்தினின் பிரசங்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று எண்ணிக் கொண்டே வேட்டை அடைந்தேன்.

No comments: