Saturday, August 4, 2018

Convenience Store Woman - Sayaka Murata


நான் ஜப்பான் ரசிகன். ஜப்பானைப் பற்றி தேடித்தேடி படிப்பவன். என்னமோ ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த தேடலில் தான் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்துகொண்டேன். இது ஒரு வித்தியாசியமான கதை.  தற்போது ஜப்பானில் நிலவும் சில முக்கிய பிரச்சனைகளை இக்கதையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.  சமீபகாலமாக ஜப்பானிய ஆண்கள் வீட்டில் தனியாக இருப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். உடலுறவு கொள்ளாத திருமணவாழ்கை . ஏற்கனவே ஜப்பானில் குழந்தைப்பிறப்பு குறைந்துகொண்டே வருகிறது.  இந்த சூழலில் நிகழும் கதை.
“This society hasn't changed one bit. People who don't fit into the village are expelled: men who don't hunt, women who don't give birth to children. For all we talk about modern society and individualism, anyone who doesn't try to fit in can expect to be meddled with, coerced, and ultimately banished from the village.” 
கதையின் நாயகியை புரிந்து கொள்வது சற்று கடினம்.இப்படியும் இருப்பார்களா என்ற எண்ணமே இறுதிவரை இருந்தது. கெய்க்கோ வீட்டில் முதல் குழந்தை சிறுவயது  முதல் தேவையென்றால் வன்முறையில் ஈடுபடுபவள். அவளுக்கு அவையெல்லாம் சரியாகவே படுகிறது. வாசிக்கும் நமக்கும் அவள் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது.  எது சரி
எது தவறு என்று சமூகம்தான் தீர்மானிக்கிறது. சமூகம் எப்படி ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாவும் எதார்தமாகவும் இக்கதையின் மூலம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
When something was strange, everyone thought they had the right to come stomping in all over your life to figure out why. I found that arrogant and infuriating, not to mention a pain in the neck. 
பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு "Hiiromachi Station Smile Mart" என்ற கடையில் வேலையில் சேர்கிறாள் கெய்க்கோ. தொடர்ந்து 18 வருடங்கள் அதே கடையில் வேலை செய்கிறாள். அவள் ஏன் அந்த வேளையிலேயே இருக்கிறாள் என்று அனைவரும் கேட்கிறார்கள். அவளோ அவள் தங்கை சொல்வதுபோல் அனைவரிடமும் தனக்கு உடம்புக்கு சரியில்லை என்று அனைவரிடமும் சொல்கிறாள். அவள் திருமனம் செய்யாமல் இருப்பதையும் அனைவரும் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அதே கடையில் வேலை பார்க்க  ஷிராக (Shiraha) வருகிறான். அவனைப் பற்றி சொல்வதென்றால் அவன் மனிதர்கள் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறான்.
You eliminate the parts of your life that others find strange--maybe that's what everyone means when they say they want to 'cure" me.
சந்தர்ப்ப சூழ்நிலையும் கெய்க்கோவின் "getting cured" முயற்சியும் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்கவைக்கிறது. அவர்களுக்கிடையே எந்த உடலுறவும் இல்லை . ஆனால் மற்றவர்கள் அவர்களை  தம்பதியர் என்று நம்புகிறார்கள். ஷிராக எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு இந்த setup பிடித்திருந்தது. அவனை  பொறுத்தவரை "Strong men who bring home a good catch have women flocking around them, and they marry the prettiest girls in the village. Men who don’t join in the hunt, or who are too weak to be of any use even if they try, are despised".அவனின் வலியுறுத்தலினால் கெய்க்கோ அவள் வேலையை விடுகிறாள். அவளது வாழ்வே தலைகீழாக மாறுகிறது. அவள் ஒரு இன்டெர்வியூவிற்கு செல்கிறாள் ஆனால் வழியில் ஒரு கடையைப் பார்க்கிறாள். எல்லாமே மாறுகிறது.  அந்த கடை தன்னோடு பேசுவதாக நம்புகிறாள் .இறுதியில் அவளால் வேறேதும் செய்ய முடியாதென்றும். கடை வேலைதான் தன வாழ்கை என்று முடிவெடுக்கிறள். ஷிராக அவளை கோபத்துடன் திட்டுகிறான்.
The normal world has no room for exceptions and always quietly eliminates foreign objects. Anyone who is lacking is disposed of. So that’s why I need to be cured. Unless I’m cured, normal people will expurgate me
ஏன் கெய்க்கோவை இந்த சமூகம் ஒரு சாதாரண பெண்ணாக ஏற்றுக்கொள்ளவில்லை ? அவளை ஏன் வாழ்க்கையில் தோல்வியடைந்த பெண்ணாக இந்த சமூகம் பார்க்கிறது? திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா? சம்பளம் குறைந்தது என்றாலும் தனக்கு மகிழ்ச்சி தரும் வேலையிலேயே இருப்பது தவறா ? இந்த கட்டமைப்புக்களை உருவாக்கியது யார் ? ஷிராக கூறுவது போல் மனிதன் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறானா ? ஒருவர் என்னதான் செய்ய வேண்டும் இந்த சமூகம் தன்னை ஒரு சாதாரண நபராக கருதுவதற்கு ? என்ற பல முக்கியமான கேள்விகளை இந்த புத்தகம் எழுப்புகிறது.

சயாக முரட்டாவிடம் கெய்க்கோ கதாபாத்திரத்தை பற்றி என்ன நினைகிறீர்கள் என்று கேட்டதற்கு **"I think Keiko was the most natural when she was as naked as nature intended, like in kindergarten, when she was able to say what she would like to say. But when she started working at a convenience store, she became so constrained by it, and those constraints turned her into a very human creature. When she wears the mask of a cashier, she can act like a human, as if she were a human. It’s not her original self, but it enables her to meet people who accept her and don’t treat her like a weirdo. She was freed from her isolation, so in that sense, it meant freedom for Keiko."

கடை ஊழியர்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்  முரட்டா. அங்கு நிகழும் சின்ன சின்ன விசயங்களையும் மிக சுவாரஸ்யமாக கூறியுள்ளார். அதுவே வாசிப்பை நல்ல அனுபவமாக்குகிறது .இந்த புத்தகம் ஜப்பானின் முதன்மை இலக்கிய விருதான அக்குடகவா(Akutagawa) விருதை வென்றது .கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

**நன்றி lithub 

No comments: